Sunday, 24 August 2014
குதிரையும் ஆட்டுக்குட்டியும்
ஒரு விவசாயி ஒரு குதிரையையும்,
ஒரு ஆட்டையும் வளர்த்து வந்தான்.
அந்தக் குதிரையும் ஆடும் சிறந்த
நண்பர்களாக இருந்தன. ஒரு நாள்
அந்தக் குதிரை வைரஸ் நோயால்
பாதிக்கப்பட்டது. அதனால், அந்த
விவசாயி குதிரைக்குச்
சிகிச்சை அளிக்க
மருத்துவரை அழைத்து வந்தான்.
மருத்துவர் அந்த குதிரையின்
நிலையைப் பார்த்து, “நான்
மூன்று நாட்கள்
வந்து மருந்து தருகிறேன். அந்த
மருந்தைக் குதிரைக்குச் சாப்பிடக்
கொடுங்கள். அதைச் சாப்பிட்ட
குதிரை எழுந்து நடந்தால் சரி,
இல்லையெனில் அதனைக்
கொன்றுவிட வேண்டியது தான்”
என்று சொல்லியபடி குதிரைக்கான
மருந்தைக் கொடுத்துச் சென்றார்.
இவர்களது உரையாடலை அந்த
ஆடு கேட்டுக் கொண்டிருந்தது.
விவசாயியும் அந்தக்
குதிரைக்கு மருத்துவர் கொடுத்த
மருந்தைக் கொடுத்தான். மறுநாள்
வந்த மருத்துவர், குதிரையைப்
பார்த்து விட்டு, அன்றைய
மருந்தைக் கொடுத்துச் சென்றார்.
அந்த மருந்தையும் குதிரைக்குக்
கொடுத்தான் அந்த விவசாயி.
பின்பு சிறிது நேரம்
கழித்து,அங்கு வந்த ஆடு, அந்தக்
குதிரையிடம், "நண்பா, நீ
எழுந்து நடக்க முயற்சி செய். நீ
நடக்கா விட்டால் அவர்கள்
உன்னைக் கொன்று விடுவார்கள்"
என்று அந்த
குதிரையை ஊக்குவித்தது.
மூன்றாம் நாளும் மருத்துவரும்
வந்தார்.
அவர்
குதிரைக்கு மருந்து கொடுத்து
விட்டு, அந்த விவசாயிடம்
"நாளை குதிரை
நடக்கவில்லையெனில், அதனைக்
கொன்றுவிட வேண்டும்.
இல்லாவிட்டால், அந்த வைரஸ்
பரவி, மற்றவர்களுக்கும்
பரவிவிடும்." என்று சொல்லிச்
சென்றார்.
இதைக் கேட்ட ஆடு, அந்த
மருத்துவர் சென்றதும், குதிரையிடம்
வந்து, “நண்பா!
எப்படியாவது எழுந்து நடக்க
முயற்சி செய். நீ நடக்க முடியாமல்
போனால் உன்னைக்
கொன்று விடுவார்கள்”
என்று சொல்லியது.
அந்தக் குதிரையும்
முயற்சி செய்து மெதுவாக
எழுந்து நடக்கத் தொடங்கியது.
தற்செயலாக அந்தப் பக்கமாக வந்த
விவசாயி அசந்து போகும்படியாக
குதிரை ஓடியது.
மறுநாள் அந்த
விவசாயி மருத்துவரை அழைத்து
வந்து குதிரையைக் காண்பித்தான்.
அவன் மருத்துவரிடம், "என்
குதிரை நன்றாகக்
குணமடைந்து விட்டது.
அது நன்றாக ஓடத்
தொடங்கி விட்டது. இதற்கு நீங்கள்
கொடுத்த மருந்துதான் காரணம். என்
குதிரையைப் பிழைக்க வைத்த
உங்களுக்கு நல்ல
விருந்து ஒன்று கொடுக்க
வேண்டும். இந்த ஆட்டை வெட்டிப்
பிரியாணி செய்து கொண்டாடி
விடுவோம்” என்றான்.
குதிரை ஆட்டின் ஊக்கத்தால்
எழுந்து நடந்தாலும் மருத்துவர்
கொடுத்த மருந்தால்தான்
குதிரை குணமடைந்ததாகத்தான்
விவசாயி நினைத்தான்.
இப்படித்தான் இந்த உலகில் யாரால்
நன்மை கிடைத்தது என்பதை
உணராமல், பலரும் உண்மையைப்
பலி கொடுத்துக்
கொண்டிருக்கிறார்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
ரசித்தவைகள்
சிட்டைகள்
- அம்மா
- எட்வின் சி ஆல்ட்ரின்
- கண்ணதாசன்
- கதை
- கலீல் ஜிப்ரான்
- கவிக்கோ அப்துல் ரகுமான்
- கவிதை
- கவியரங்கில் கவியரசு
- காதல்
- காதல் கொஞ்சல்
- காஜல் அகமட்
- குதிரையும் ஆட்டுக்குட்டியும்
- சிரிப்பு
- சிறுகதை
- சிறுமியும் தேவதையும்.
- தோழிமார் கதை
- நண்பா உனக்கொரு வெண்பா
- நீல் ஆம்ஸ்ட்ராங்க்
- பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
- மெளனத்தில் புதைந்த கவிதைகள்
- மௌன பூகம்பம்
- விதைச்சோளம்
- வைரமுத்து
ரசித்ததை ரசித்தவர்கள்
2,444
Follow us
Label Cloud
- அம்மா
- எட்வின் சி ஆல்ட்ரின்
- கண்ணதாசன்
- கதை
- கலீல் ஜிப்ரான்
- கவிக்கோ அப்துல் ரகுமான்
- கவிதை
- கவியரங்கில் கவியரசு
- காதல்
- காதல் கொஞ்சல்
- காஜல் அகமட்
- குதிரையும் ஆட்டுக்குட்டியும்
- சிரிப்பு
- சிறுகதை
- சிறுமியும் தேவதையும்.
- தோழிமார் கதை
- நண்பா உனக்கொரு வெண்பா
- நீல் ஆம்ஸ்ட்ராங்க்
- பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
- மெளனத்தில் புதைந்த கவிதைகள்
- மௌன பூகம்பம்
- விதைச்சோளம்
- வைரமுத்து
Pages
Powered by Blogger.
நான்

- fasnimohamad
- புத்தகங்களோடு நடை பயிலும் சாதாரண இளைஞன்,உயிர் உள்ளவரை எழுதனும்..... நான் என்பதே யதார்த்தம்
Popular Posts
-
ஒரு விவசாயி ஒரு குதிரையையும், ஒரு ஆட்டையும் வளர்த்து வந்தான். அந்தக் குதிரையும் ஆடும் சிறந்த நண்பர்களாக இருந்தன. ஒரு நாள் அந்தக் குதிரை வை...
-
அம்மா... நான் எங்கே இருக்கிறேன் என்று தெரியவில்லை. என்னைச் சுற்றி ஏதோ தண்ணீர் நிரம்பியிருக்கிறது. எப்போதும் மிதந்து கொண்டே இருக்கிறேன். கண...
-
கம்மாக் கரையோரம் களையெடுக்கும் வேளையில கறுப்புக் கொடபுடிச்சுக் கரைவழியே போனீரு அப்ப நிமிந்தவதான் அப்புறமாக் குனியலையே கொடக்கம்பி போலம...
-
திடீரென்று... மேகங்கள் கூடிப் புதைத்தன வானை ஒரே திசையில் வீசலாயிற்று உலகக் காற்று பூனையுருட்டிய கண்ணாடிக்குடமாய் உருண்டது பூமி மருண்...
-
அதிகாலை ஒலிகள் ஐந்துமணிப் பறவைகள் இருட்கதவுதட்டும் சூரியவிரல் பள்ளியெழுச்சி பாடும்உன் பாதக்கொலுசு உன் கண்ணில் விழிக்கும் என் கண்கள் ...
-
நான் பிறந்து மூன்று நாட்கள் ஆகியிருந்தன.. நான் தொட்டிலில் இருந்தபடி என் புதிய உலகத்தை ஆச்சர்யம் கலந்த ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருந்தேன்...
-
ஒரு இளம் தம்பதி... மலைப் பிரதேசம் ஒன்றிற்கு பேருந்தில் போய்க் கொண்டிருந்தார்கள். வளைந்து நெளிந்த பாதைகளில் சென்று கொண்டிருந்தது பேருந்து....
-
மனைவி: டேய், எனக்கு ஒரு சந்தேகம்!!! கணவன்: என்ன? மனைவி: யார் இந்த உலகத்துலேயே அதிக மகிழ்ச்சியாக இருக்கா? நீயா?? நானா??? கணவன்...
-
இவர் தான் நிலவில் முதன் முதலில் கால் வைத்தவர்... ஆனால், முதன் முதலில் வைத்திருக்க வேண்டியவர் யார் தெரியுமா?... பல பேருக்கு தெரியாது... அவ...
-
கவிஞர் காஜல் அகமட் ஈராக்கின் கிர்குக் நகரில் குர்து இனத்தில் பிறந்தவர். கவிஞர், ஊடகவியலாளர், சமூக ஆய்வாளர். ஐந்து நூல்களை எழுதியுள்ளார். ...
Popular Posts
-
ஒரு விவசாயி ஒரு குதிரையையும், ஒரு ஆட்டையும் வளர்த்து வந்தான். அந்தக் குதிரையும் ஆடும் சிறந்த நண்பர்களாக இருந்தன. ஒரு நாள் அந்தக் குதிரை வை...
-
அம்மா... நான் எங்கே இருக்கிறேன் என்று தெரியவில்லை. என்னைச் சுற்றி ஏதோ தண்ணீர் நிரம்பியிருக்கிறது. எப்போதும் மிதந்து கொண்டே இருக்கிறேன். கண...
-
கம்மாக் கரையோரம் களையெடுக்கும் வேளையில கறுப்புக் கொடபுடிச்சுக் கரைவழியே போனீரு அப்ப நிமிந்தவதான் அப்புறமாக் குனியலையே கொடக்கம்பி போலம...
-
திடீரென்று... மேகங்கள் கூடிப் புதைத்தன வானை ஒரே திசையில் வீசலாயிற்று உலகக் காற்று பூனையுருட்டிய கண்ணாடிக்குடமாய் உருண்டது பூமி மருண்...
-
அதிகாலை ஒலிகள் ஐந்துமணிப் பறவைகள் இருட்கதவுதட்டும் சூரியவிரல் பள்ளியெழுச்சி பாடும்உன் பாதக்கொலுசு உன் கண்ணில் விழிக்கும் என் கண்கள் ...
-
நான் பிறந்து மூன்று நாட்கள் ஆகியிருந்தன.. நான் தொட்டிலில் இருந்தபடி என் புதிய உலகத்தை ஆச்சர்யம் கலந்த ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருந்தேன்...
-
ஒரு இளம் தம்பதி... மலைப் பிரதேசம் ஒன்றிற்கு பேருந்தில் போய்க் கொண்டிருந்தார்கள். வளைந்து நெளிந்த பாதைகளில் சென்று கொண்டிருந்தது பேருந்து....
-
மனைவி: டேய், எனக்கு ஒரு சந்தேகம்!!! கணவன்: என்ன? மனைவி: யார் இந்த உலகத்துலேயே அதிக மகிழ்ச்சியாக இருக்கா? நீயா?? நானா??? கணவன்...
-
இவர் தான் நிலவில் முதன் முதலில் கால் வைத்தவர்... ஆனால், முதன் முதலில் வைத்திருக்க வேண்டியவர் யார் தெரியுமா?... பல பேருக்கு தெரியாது... அவ...
-
கவிஞர் காஜல் அகமட் ஈராக்கின் கிர்குக் நகரில் குர்து இனத்தில் பிறந்தவர். கவிஞர், ஊடகவியலாளர், சமூக ஆய்வாளர். ஐந்து நூல்களை எழுதியுள்ளார். ...
0 comments:
Post a Comment