Sunday, 22 March 2015
கண்ட நாள் முதல்
கொழும்பு விமான நிலையம் என்றும் போல் அன்றும் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தது. இன்னும் சற்று நேரத்தில் தரையிறங்க போகின்ற விமானங்களின் வருகைக்காக காத்திருக்கும் மக்கள். லண்டனில் இருந்து வரும் விமானத்தில் பார்கவி தாய் நாட்டிற்கு திரும்புகிறோம் என்கிற மகிழ்ச்சியில் இருந்தாலும் ஏதோ மனதில் நெருடியது. என்றும் இல்லாத ஒரு சலனம் மனதில் எல்லாம் இந்த விமான பயணத்தினால் ஏற்பட்டது.
பார்கவி இரண்டு வருடங்களாக லண்டனில் ஹொட்டெல் மனேஜ்மென்ட் படித்து முடித்து விட்டு தற்போது நாடு திரும்புகிறாள். விமானத்தில் ஆரம்பதிலேயே வந்து அமர்ந்து விட்டதால் ஒரு சில பயணிகளே காணபட்டனர். சிறிது நேரத்தில் எல்லோரும் வந்துவிட இறுதியாக அவன் வந்தான்., மாநிறம் ஆறடிக்கும் சற்று கூடுதல் உயரம் திடமான உடற்கட்டு தவறாமல் உடற்பயிற்சி செய்வான் போல பார்கவி விழிமூட மறந்து வியந்து பார்த்தாள். தனக்கே தன்செயல் அதிசயமாய் தானா இப்படி ஒரு ஆடவனை அதுவும் இவ்வளவு உன்னிப்பாக அவதானிப்பது கண்டதும் காதல் என்பார்களே அப்படி ஒரு உணர்வு ஏற்பட்டது. அவளுக்கே ஒரு மாதிரியாக ஜன்னல் பக்கம் திரும்பிக்கொண்டாள். பக்கத்து சீட்டில் அரவம் கேட்க திகைத்துப்போனாள். அவனே அதுவும் அவள் அருகில் மனம் எல்லாம் பல பட்டாம்பூச்சிகள் சிறகடித்தன என்ன இது புது விதமான படபடப்பு அதுவும் சுகமாய்....
இதுதான் காதலா தோழிகள் சொல்ல கேட்டிருகிறாள் இது மாதிரியான அனுபவங்களை, ஆனால் அதெல்லாம் இருமனம் இணைந்த காதல் இது தன் மனம் மட்டும் தானே இப்படி அவன் தன்னை கண்டுகொண்டதாகவே தெரியவில்லையே.
சகபயணிக்கு ஒரு ஹலோ கூடவா சொல்லகூடாது என்று எண்ணும் போதே அவள் காதில் அது கேட்டது ஹலோ நான் ப்ரணவ். இவளும் பதிலுக்கு சிரித்து நான் பார்கவி என்றாள்.
ஒரு ஆணின் சிரிப்புக்கூட இவ்வளவு கவர்ச்சியா என்று தோன்றியது. அவன் தொழில் விஷயமாக இலங்கை போவாதாக சொல்ல தான் படிப்பு முடிந்து போவதாக சொன்னாள். பின்னர் இருவருக்கும் இடையில் மெளனம் தான் மொழி பேசியது.
பார்வைக்கு கண்ணியமானவனாக தோன்றினான். வழிசல் கிடையாது ஆனால் எதிலும் ஒரு தீவிரமான பார்வை தெரிந்தது. இன்னும் சற்று நேரத்தில் விமானம் தரையிறங்கப்போகிறது என்ற பணிப்பெண்ணின் குரலில் நிஜத்திற்கு வந்தாள்.
வீட்டாரை காணும் எண்ணத்தில் பரவசம் கொண்டது மனது. விமானமும் தரையிறங்கியது. எல்லோரும் விலகிச்செல்ல அவள் கண்கள் தேடியது அவனை. அவனும் அவளிடம் ஒரு பை சொல்லி தலையசைப்புடன் விலகினான். பதிலுக்கு சிரித்து பை சொன்னாலும் ஏதோ இனம்புரியாதா கவலையாக இருந்தது. இதெல்லாம் நிறையவே பழகியவன் போல என்றெண்னிக்கொண்டே அவ்விடத்தை விட்டு விலகி நடந்தாள்.
வீட்டாரை கண்டதும் சந்தோசம் பெருகியது. வீட்டை காணப்போகிற மகிழ்ச்சி தொற்றிக்கொண்டது. எங்காவது நீண்ட பயணம் செல்ல நேர்ந்தால் திரும்பி வரும் வழியெல்லாம் எப்போது சென்று குளித்துவிட்டு ஒரு தூக்கம் போடுவோம் என்று இருக்கும். அவளது கட்டிலை கண்டால் தான் ஒரு நிம்மதியே கிடைக்கும். ஆனால் இந்தமுறை வீட்டை காணுவதே ஒரு நிம்மதி போல் தோன்றியது. அம்மாவின் சமையல் சாப்பிட்டு அம்மா சொல்லும் அக்கம்பக்கத்தவர்களின் கதைகள் கேட்டு எவ்வளவு காலம் ஆகிற்று என்று தோன்றியது.
குடும்பத்தவர்களுடன் அன்றய பொழுது இனிதே கடந்தது. இந்த சந்தோசமும் நிம்மதியும் எங்கு சென்றாலும் கிடைக்காது என்று தோன்றியது.
அதனால் தானே லண்டனில் கிடைத்த வேலையையும் வேண்டாம் என்று வந்தாள். அந்த வேலையை ஏற்பாடு செய்தவர் திரு அங்கிள் அவள் தங்கியிருந்தது அவரின் வீட்டில்தான். அவர் வேலை செய்தது அந்த பகுதியில் மிகவும் பிரபலமான டயமன்ட் ஹோட்டெலில். அதன் உரிமையாளர் ஒரு தமிழராம். உதவி முகாமையாளர் பதவிக்கான வெற்றிடம் நிலவ இவளை கேட்டார். இவள்தான் வேண்டாம் என்று வந்தாள்.
இங்கேயே ஏதாவது வேலை பார்த்துக்கொள்ளலாம் என்று நினைத்துக்கொண்டாள். எப்படியாவது இந்த ஒருவாரத்திற்குள் ஒரு நல்ல வேலைக்கு போகவேண்டும் என்று எண்ணிக்கொண்டே தூங்கச்சென்றாள். கண்களை மூட அவன் வந்தான். சட்டென்று கண்களை திறந்தாள். என்ன இது என்றும் இல்லாதவாறு இன்று மட்டும் இப்படி தன் மனம் சலனப்படுகிறது எல்லாம் இந்த பயணத்தால் வந்த வினை. ம்ஹும் இனி இதை பற்றி நினைக்கவே கூடாது என்று நினைத்துக்கொண்டே உறங்க்கிப்போனாள்.
அவள் வந்து சரியாக ஐந்தாவது நாள் திரு அங்கிள் போன் செய்தார். பவிம்மா உனக்கொரு நல்ல வாய்ப்பு. கொழும்பில் உள்ள டயமன்டின் உதவி முகாமையாளர் ஒருவர் இங்கு வரப்போகிறாராம். அந்த இடத்திற்கு பொருத்தமான ஆளை தேடிக்கொண்டிருகிறார்களாம். நான் உன்ன சொன்னேன் ஏற்கனவே உன்ன இங்க சிபாரிசு செய்தேன் இல்லையா, அதான் அவங்களும் உன்ன அங்க வந்து மனேஜ்மென்ட சந்திக்கச்சொன்னாங்க என்றார். இவளுக்கு சந்தோசம்
ஓகே அங்கிள் என்று நன்றி சொன்னாள். திரு அங்கிளின் குடும்பத்தில் எல்லோருமே ரொம்ப நல்லவர்கள் இந்த இரண்டு வருடத்தில் அவளுக்கு பெரிதும் உதவியாய் இருந்தவர்களும் கூட...
அடுத்த நாள் காலை ஹொட்டெலை தேடிப்பிடித்து போனாள். அழகாக கட்டப்பட்டிருந்தது. செல்லும் பாதைகள் எல்லாம் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டிருந்தன. இங்கு வேலை செய்யக்கிடைத்தால் தான் அதிஸ்டசாலியே என நினைத்தாள்.
வரவேற்பறை பெண் ரொம்பவே அழகாக இருந்தாள். அவளுக்கே உரிய பாணியில் ஆங்கிலத்தில் யாரோ வெளிநாட்டவர்களுடன் பேசிகொண்டிருந்தாள். அவர்கள் விலகிச்சென்றதும் இவள் வந்த விடயத்தை சொன்னாள். அவள் போனில் யாருடனோ பேசிவிட்டு போகுமாறு சொல்லி வழியையும் கூறி அனுப்பினாள்.
அப்பெண் சொன்ன அறைக்கு சென்றாள்.கதவை திறக்க முற்படுகையிலேயே கதவு திறந்துகொண்டது உள்ளே சென்று குட்மோனிங் சொல்ல வாயெடுக்கையில் குரல் தடுமாறியது போன்ற உணர்வு. எம்.டி சீட்டில் ப்ரணவ். மயக்கம் வருவது போல் உணர்ந்தாள். இருக்க சொன்னான். நன்றி சொல்லி இருந்து கொண்டாள் ஒரே படபடப்பாக இருந்தது அவன் ஏதோ கேள்விகள் கேட்டான். என்ன பதில் சொல்லுகிறோம் என்றே தெரியாமல் சொல்லிமுடித்தாள். நாளையில் இருந்து வேலையில் சேர்ந்து கொள்ளும்படி சொன்னான். சரி என்று கூறினாள். இப்போதைக்கு இந்த இடத்தை விட்டு வெளியேறினால் போதும் என்று தோன்றியது அவளுக்கு. வீடு வந்து சேர்ந்து அம்மாவிடம் சொல்லிவிட்டு அறைக்குள் புகுந்து கொண்டாள்.
ஆ..... இவன் எம்.டி ஆக இருப்பான் என்று எதிர்பார்க்கவில்லையே. அடுத்து தன்னை ஏற்கனவே கண்டு அறிமுகமானது போலும் காட்டிகொள்ளவில்லை. இவனுக்கு ஏதாவது ஞாபகம் இருக்கா இல்லையா.. அவனை பார்க்கும் போதெல்லாம் வயிற்றுக்கும் நெஞ்சுக்கும் இடையில் ஏதோ ஓடித்திரிகிறதே. என்ன செய்யட்டும் என்று மனம் வருந்திக்கொண்டிருக்கையில் அவளது போன் அழைத்தது. ஏதோ நினைவில் காதில் வைத்தாள் மறுமுனையில் நான் ப்ரணவ் என்ற குரலை கேட்டதும் திடுக்கிட்டு போனாள். என்ன சொல்வது என்று தெரியாமல் ஹலோ சொல்லுங்க என்றாள். அவன் ஆ யு ஓகே?? என்றான். இல்ல இன்டைக்கு உங்கள பார்க்கும் போது ஏதோ டென்சனா இருந்தீங்க அதான் கேட்டேன் என்றான். இவளுக்கு ஐயோ என்றிருந்தது கண்டுபிடித்து விட்டானா என்றெண்ணியவாறே ஐம் ஓகே நத்திங் டூ வொறி என்றாள். மீண்டும் அவனே தொடர்ந்தான் அப்ப ஓகே நாளைக்கு வருவீங்கல்ல என்று இழுத்து விட்டு பிறகு இன்னொரு விஷயம் என்றான். ஓகே சொல்லுங்க என்றாள் சிறியதொரு மெளனத்திற்கு பிறகு மீண்டும் தொடர்ந்தான் எப்டி சொல்றதுன்னு தெரியல ஐ திங் ஐ லைக் யு என்றான். அவளுக்கு அந்த வார்த்தையை கேட்கையில் வானவில் நூறு உடைந்து தன் மேல் கொட்டியது போன்று இருந்தது.
தன் மனதை வெளிக்காட்டாமல் மெளனமாகவே இருந்தாள். அவன் தொடர்ந்தான் அன்று உன்னை ப்ளைட்ல பார்த்தபோதே எனக்கு பிடிச்சிருந்தது ஆனா அது சும்மா ஒரு infatuation னு நினைச்சன். அதுக்கு பிறகும் என்னோட மைன்ட் Disturb ஆகிட்டேதான் இருந்திச்சு அப்பவே கதைச்சு ஏதாவது உன்ன பற்றி தெரிஞ்சிருந்திருக்கலாமோ என்றிருந்திச்சு. அப்பதான் நேற்று உன்ன பற்றி திரு அங்கிள் சொன்னதா அப்பா உன்னோட Details அனுப்பினார் பார்த்த உடனே கடவுளே நாம சந்திக்க இந்த வாய்ப்ப குடுத்திருக்கிறதா நினைச்சேன். நான் உன்ன நேசிக்கிறேன் என்றான். உனக்கும் சம்மதம் என்றால் நீ நாளைக்கு நேர என்ன வந்து பார்க்கலாம் இல்லனா நீ உன்னுடைய வொர்க்க பார்க்கலாம் இப்ப நான் வைக்கிறேன் என்று இணைப்பை துண்டித்தான். காதல் இவ்வளவு சீக்கிரம் கைகூடும் என்று நினைக்கவில்லை தன்னை போலவே அவனுக்கும் தோன்றி இருப்பதை நினைத்து நினைத்து பரவசம் கொண்டாள். ஆரம்பத்தில் பன்மையில் அரம்பித்து பின்னர் உரிமையாய் ஒருமையில் குறிப்பிட்டது பிடித்திருந்தது. நாளைக்கு எந்த ஆடை அணிந்து செல்வது, எப்படி அவனை பார்ப்பது, தன் மனம் பற்றி எப்படி சொல்வது என்ற ஆராய்ச்சியில் மூழ்கினாள்
கதை மூலம் Sharmila Vinayaham
Subscribe to:
Post Comments (Atom)
சிட்டைகள்
- அம்மா
- எட்வின் சி ஆல்ட்ரின்
- கண்ணதாசன்
- கதை
- கலீல் ஜிப்ரான்
- கவிக்கோ அப்துல் ரகுமான்
- கவிதை
- கவியரங்கில் கவியரசு
- காதல்
- காதல் கொஞ்சல்
- காஜல் அகமட்
- குதிரையும் ஆட்டுக்குட்டியும்
- சிரிப்பு
- சிறுகதை
- சிறுமியும் தேவதையும்.
- தோழிமார் கதை
- நண்பா உனக்கொரு வெண்பா
- நீல் ஆம்ஸ்ட்ராங்க்
- பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
- மெளனத்தில் புதைந்த கவிதைகள்
- மௌன பூகம்பம்
- விதைச்சோளம்
- வைரமுத்து
ரசித்ததை ரசித்தவர்கள்
2,444
Follow us
Label Cloud
- அம்மா
- எட்வின் சி ஆல்ட்ரின்
- கண்ணதாசன்
- கதை
- கலீல் ஜிப்ரான்
- கவிக்கோ அப்துல் ரகுமான்
- கவிதை
- கவியரங்கில் கவியரசு
- காதல்
- காதல் கொஞ்சல்
- காஜல் அகமட்
- குதிரையும் ஆட்டுக்குட்டியும்
- சிரிப்பு
- சிறுகதை
- சிறுமியும் தேவதையும்.
- தோழிமார் கதை
- நண்பா உனக்கொரு வெண்பா
- நீல் ஆம்ஸ்ட்ராங்க்
- பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
- மெளனத்தில் புதைந்த கவிதைகள்
- மௌன பூகம்பம்
- விதைச்சோளம்
- வைரமுத்து
Pages
Powered by Blogger.
நான்

- fasnimohamad
- புத்தகங்களோடு நடை பயிலும் சாதாரண இளைஞன்,உயிர் உள்ளவரை எழுதனும்..... நான் என்பதே யதார்த்தம்
Popular Posts
-
ஒரு விவசாயி ஒரு குதிரையையும், ஒரு ஆட்டையும் வளர்த்து வந்தான். அந்தக் குதிரையும் ஆடும் சிறந்த நண்பர்களாக இருந்தன. ஒரு நாள் அந்தக் குதிரை வை...
-
அம்மா... நான் எங்கே இருக்கிறேன் என்று தெரியவில்லை. என்னைச் சுற்றி ஏதோ தண்ணீர் நிரம்பியிருக்கிறது. எப்போதும் மிதந்து கொண்டே இருக்கிறேன். கண...
-
கம்மாக் கரையோரம் களையெடுக்கும் வேளையில கறுப்புக் கொடபுடிச்சுக் கரைவழியே போனீரு அப்ப நிமிந்தவதான் அப்புறமாக் குனியலையே கொடக்கம்பி போலம...
-
திடீரென்று... மேகங்கள் கூடிப் புதைத்தன வானை ஒரே திசையில் வீசலாயிற்று உலகக் காற்று பூனையுருட்டிய கண்ணாடிக்குடமாய் உருண்டது பூமி மருண்...
-
அதிகாலை ஒலிகள் ஐந்துமணிப் பறவைகள் இருட்கதவுதட்டும் சூரியவிரல் பள்ளியெழுச்சி பாடும்உன் பாதக்கொலுசு உன் கண்ணில் விழிக்கும் என் கண்கள் ...
-
நான் பிறந்து மூன்று நாட்கள் ஆகியிருந்தன.. நான் தொட்டிலில் இருந்தபடி என் புதிய உலகத்தை ஆச்சர்யம் கலந்த ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருந்தேன்...
-
ஒரு இளம் தம்பதி... மலைப் பிரதேசம் ஒன்றிற்கு பேருந்தில் போய்க் கொண்டிருந்தார்கள். வளைந்து நெளிந்த பாதைகளில் சென்று கொண்டிருந்தது பேருந்து....
-
மனைவி: டேய், எனக்கு ஒரு சந்தேகம்!!! கணவன்: என்ன? மனைவி: யார் இந்த உலகத்துலேயே அதிக மகிழ்ச்சியாக இருக்கா? நீயா?? நானா??? கணவன்...
-
இவர் தான் நிலவில் முதன் முதலில் கால் வைத்தவர்... ஆனால், முதன் முதலில் வைத்திருக்க வேண்டியவர் யார் தெரியுமா?... பல பேருக்கு தெரியாது... அவ...
-
கவிஞர் காஜல் அகமட் ஈராக்கின் கிர்குக் நகரில் குர்து இனத்தில் பிறந்தவர். கவிஞர், ஊடகவியலாளர், சமூக ஆய்வாளர். ஐந்து நூல்களை எழுதியுள்ளார். ...
Popular Posts
-
ஒரு விவசாயி ஒரு குதிரையையும், ஒரு ஆட்டையும் வளர்த்து வந்தான். அந்தக் குதிரையும் ஆடும் சிறந்த நண்பர்களாக இருந்தன. ஒரு நாள் அந்தக் குதிரை வை...
-
அம்மா... நான் எங்கே இருக்கிறேன் என்று தெரியவில்லை. என்னைச் சுற்றி ஏதோ தண்ணீர் நிரம்பியிருக்கிறது. எப்போதும் மிதந்து கொண்டே இருக்கிறேன். கண...
-
கம்மாக் கரையோரம் களையெடுக்கும் வேளையில கறுப்புக் கொடபுடிச்சுக் கரைவழியே போனீரு அப்ப நிமிந்தவதான் அப்புறமாக் குனியலையே கொடக்கம்பி போலம...
-
திடீரென்று... மேகங்கள் கூடிப் புதைத்தன வானை ஒரே திசையில் வீசலாயிற்று உலகக் காற்று பூனையுருட்டிய கண்ணாடிக்குடமாய் உருண்டது பூமி மருண்...
-
அதிகாலை ஒலிகள் ஐந்துமணிப் பறவைகள் இருட்கதவுதட்டும் சூரியவிரல் பள்ளியெழுச்சி பாடும்உன் பாதக்கொலுசு உன் கண்ணில் விழிக்கும் என் கண்கள் ...
-
நான் பிறந்து மூன்று நாட்கள் ஆகியிருந்தன.. நான் தொட்டிலில் இருந்தபடி என் புதிய உலகத்தை ஆச்சர்யம் கலந்த ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருந்தேன்...
-
ஒரு இளம் தம்பதி... மலைப் பிரதேசம் ஒன்றிற்கு பேருந்தில் போய்க் கொண்டிருந்தார்கள். வளைந்து நெளிந்த பாதைகளில் சென்று கொண்டிருந்தது பேருந்து....
-
மனைவி: டேய், எனக்கு ஒரு சந்தேகம்!!! கணவன்: என்ன? மனைவி: யார் இந்த உலகத்துலேயே அதிக மகிழ்ச்சியாக இருக்கா? நீயா?? நானா??? கணவன்...
-
இவர் தான் நிலவில் முதன் முதலில் கால் வைத்தவர்... ஆனால், முதன் முதலில் வைத்திருக்க வேண்டியவர் யார் தெரியுமா?... பல பேருக்கு தெரியாது... அவ...
-
கவிஞர் காஜல் அகமட் ஈராக்கின் கிர்குக் நகரில் குர்து இனத்தில் பிறந்தவர். கவிஞர், ஊடகவியலாளர், சமூக ஆய்வாளர். ஐந்து நூல்களை எழுதியுள்ளார். ...
0 comments:
Post a Comment